Sunday, February 19, 2012
சுனாமி, நிலநடுக்கம் வந்தாலும் அணுஉலைக்கு ஆபத்து இல்லை: தமிழக நிபுணர் குழு உறுப்பினர்கள்
திருநெல்வேலி: கூடங்குளத்தில் சுனாமி வந்தாலும், ரிக்டர் அளவில் 6.5 என்ற அளவில் பூகம்பம் வந்தாலும் கூடங்குளம் அணுஉலைக்கு ஆபத்து இல்லை என தமிழக நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
கூடங்குளம் அணுஉலை போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முதல்வர் ஜெயலலிதா நிபுணர் குழுவை அமைத்தார். இந்த குழுவினர் நேற்று கூடங்குளத்தில் நேரிடையாக சென்று ஆய்வு செய்தனர். பின்னர் நிபுணர் குழுவினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை நெல்லை மாவட்ட கலெக்டர் முன்னிலையில் சுமார் 2 மணி நேரம் நடந்தது.
பேச்சுவார்த்தை தொடக்கம் தான்: உதயகுமார்: ஆலோசனைக்கு பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், தமிழக அரசு அமைத்த நிபுணர் குழுவுடனான பேச்சுவார்த்தை தொடக்கம் தான். கூடங்குளத்தை சுற்றியுள்ள கிராம மக்களை நிபுணர் குழு நேரிடையாக சந்திக்க வேண்டும். போராட்ட குழுவின் நிபுணர் குழுவையும் தமிழக நிபுணர் குழு சந்திக்க வேண்டும். எங்களது கோரிக்கைகள் குறித்து பேசி முடிவு தெரிவிப்பதாக தமிழக அரசு அமைத்த நிபுணர் குழு கூறியதாகவும் கூறினார்.
ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் நிபுணர் குழு உறுப்பினர்கள் சீனிவாசன் மற்றும் இனியன் கூறுகையில், கூடங்குளம் அணுஉலை மிகவும் பாதுகாப்பானது. இங்கு ஏழு அம்ச பாதுகாப்பு உள்ளது. விரைவில் சென்னை சென்று தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என கூறினார்.
பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழக அரசு அமைத்த நிபுணர் குழு உறுப்பினர் சீனிவாசன், கூடங்குளம் அணுஉலை மிகவும் பாதுகாப்பானது. மூன்றாவது தலைமுறையை சேர்ந்த முன்னேறிய தொழில்நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது. அணு<உலையில் ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது என கூறினார்.
மற்றொரு உறுப்பினரான இனியன் கூறுகையில், கூடங்குளம் அணுஉலை மிகவும் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுனாமி வந்தாலும், ரிக்டர் அளவுகோளில் 6.5 என்ற அளவில் பூகம்பம் வந்தாலும் கூடங்குளம் அணு<உலைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இங்கு கடல் நீர் கொண்டு வருவதை பார்வையிட்டோம். இதில் ஒரு மீன் கூட சாகாது. கூடங்குளம் அணு <உலை கடல் மட்டத்திலிருந்து 25 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை காட்டிலும் உயரமாக அணுஉலை அமைக்கப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் ஜெனரேட்டர்கள் இருந்ததை ஆய்வின் போது பார்க்க முடிந்தது. கூடங்குளம் அணு<உலையில் 7 அம்ச பாதுகாப்பில் அமைக்கப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் இயற்கையாக குளிரூட்டும் வசதி செய்யப்பட்டுள்ளது. மின்சாரம் தடைபட்டாலும் கூட இயற்கையாக குளிரூட்டும் வசதி செய்யப்பட்டுள்ளது. விஞ்ஞானிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. போராட்டக்காரர்கள் மூலமாக மக்களின் உணர்வுகளை அறிய முடிந்தது. அவர்கள் இரண்டுகோரிக்கைகள் வைத்தனர். போராட்டக்காரர்கள் அமைத்த நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்த வேண்டும். கூடங்குளத்தை சுற்றியுள்ள கிராமமக்களை சந்திக்க வேண்டும் என கூறினர். மக்களை சந்திக்கும் பணிஎங்களுக்கு அரசு தரவில்லை. இதனை நாங்கள் அவர்களிடம் தெரிவித்தோம். இந்த ஆலோசனை கூட்டத்தில் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. விரைவில் சென்னை சென்று , போராட்டக்காரர்கள் கொடுத்த ஆவணங்களை ஆய்வு செய்து அதன் பின்னர் அறிக்கை தயாரித்து அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்போம். அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும். இதற்கு கால அவகாசம் செய்ய முடியாது என கூறினார்.
Subscribe to:
Posts (Atom)